Skip to main content

Posts

Showing posts from March, 2018

கன்னம் தொட்டாள்❤

அன்றொரு நாள் இரவினிலே காதருகே வந்தாள் இனிய மூச்சு காற்றை விட்டாள் பலவற்றை கொஞ்சும் மொழியுடன் உரைத்தாள் பூங்கரத்தை கொண்டு என் கன்னம் தொட்டாள் அன்போடு வந்தாள் அன்பால் நனைய செய்தாள் கண் மூடி குருநகையோடு ஆனந்த துயில் கொண்டாள் அம்மா பாப்பா தூங்கிவிட்டாள் வா என்று நான் தூங்க சென்றேன் தூக்கம் சொருகிய மழலையின் முகம் பேர் அமைதியின் பிறப்பிடம் உண்மை அன்பின் இருப்பிடம்

தனிமை தடயங்கள் 😂

தென்றல் வந்து அவள் முடியை வம்பு செய்ய, அவள் கரங்கள் வந்து தென்றலை போர் புரிய, வேடிக்கை பார்த்த என்னை அவள் விழியால் சிறைபிடிக்க, நேரம் கரைய அவள் கரம்பிடித்து நடக்க ஆசை எனக்கும் உண்டு, கடைசியில் என் தனிமை தடயங்களை எள்ளி நகையாடி கொண்டே அழித்துவிட்டு காதலர்கள் வருவார்கள் நீ விரைந்து செல் என்றது கடல்.                                          ❤தமிழன்பன்❤

வா! நீ வா வா!

வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா காதல் கொண்டு என் உயிரை குடைந்தாய் குடைந்தையே கண்டாயா ஒரு அழகு ஒன்று கண்டாயா வியன்தயா உணர்ந்தயா என் உயிரோடு படர்வாயா வாழ வழி கொடு இல்லை விழி கொண்டு கொன்று விடு வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா திசையெங்கும் தீருவோம் வா திசை மாறி செல்வோம் வா வழி எங்கும் நடப்போம் வா இரு கரம் கோர்த்து கொள்வோம் வா காலங்கள் சென்றிடுமே நரை கூட வந்திடுமே மாறாமல் வாழ்ந்திடுவோம் காதலை மெய்பிபோம் உண் கண் கொண்டு செய்தி கொடு என் உயிர் கொண்டு படையெடுப்பேன் வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா