அன்றொரு நாள் இரவினிலே காதருகே வந்தாள் இனிய மூச்சு காற்றை விட்டாள் பலவற்றை கொஞ்சும் மொழியுடன் உரைத்தாள் பூங்கரத்தை கொண்டு என் கன்னம் தொட்டாள் அன்போடு வந்தாள் அன்பால் நனைய செய்தாள் கண் மூடி குருநகையோடு ஆனந்த துயில் கொண்டாள் அம்மா பாப்பா தூங்கிவிட்டாள் வா என்று நான் தூங்க சென்றேன் தூக்கம் சொருகிய மழலையின் முகம் பேர் அமைதியின் பிறப்பிடம் உண்மை அன்பின் இருப்பிடம்