Skip to main content

Posts

புதியதோர் பதிவு

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐
Recent posts

😍அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்😍

காலம் நம்மை உமிழும் போது, உறவுகள் நம்மை மறந்த போது, நட்பும் விலகி செல்லும் போது, கண்ணில் நீறும் சுரக்கும் போது, வாழ்வே வெறுத்து அனலாய் மாறும் போது, நினைவுகள் யாவும் சூழ்ந்து நம்மை கொல்லும் போது, தனிமை நம்மை கேள்வி வைக்கும் போது, கோவம் நம் எதிரி ஆகிறது பேரன்பு நம் நண்பனாகிறது. பேரின்ப வாழ்க்கை நம் கனவாகிறது.                               💞தமிழன்பன்💞

சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!----நா. முத்துக்குமார்.

பரிணாமம்🙏 டைனோசர் கனவில் மனிதன் ஒரு ஜந்து. நேரம்🙏 அது ஓடிக்கொண்டிருக்கிறது நான் பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை🙏 வழியே தெரியவில்லை ஆனாலும் கம்பீரமாக நடக்கிறேன். சிரிப்பு🙏 என் ஆனந்தின் வெளிப்பாடும் என் வெறுப்பின் வெளிப்பாடும். அழுகை🙏 பல நேரம் மறைத்து வைப்பேன் தனிமையிளோ கட்டி அன்னைப்பேன். நட்பு🙏 என் நினைவுகளில் பாதி இங்கிருந்து எடுக்கப்பட்டதே. அப்பா🙏 இவர் கைகள் சுத்தியை தட்ட தட்ட நான் வளர்ந்து கொண்டே இருந்தேன் அவர் தேய்ந்து கொண்டே இருந்தார். அம்மா🙏 சதா சர்வ காலமும் அவள் சிந்தனையில் நாங்கள், ஏனோ தன்னை மறந்தே போகிறாள். தமையன்🙏 பிறரை போல் எனக்கும் இவன் நண்பனும் சில நேரங்களில் எதிரியும். காதல்🙏 காணல் நீரை எட்டி நின்றே ரசித்து செல்பவன் நான் நெருங்கி சென்றால் விலகி விடுமென்று. பாசம்🙏 நினைத்தாலும் மறைத்து வைக்க முடியாதது. கோவம்🙏 தேவையான ஒன்று தேவையற்ற நேரங்களில் வேதனையான ஒன்று. கவிதை🙏 கிருக்கல்களும் சில சமயங்களில் ஓவியமாகிறது.                               💞த...

இளமை பய(ண)ம் 😭😫😨 நன்றி பொன் மூர்த்தி👍👍

ஒரு மாற்றம்  ஏனோ தடு மாற்றம் முற்றம் சென்று முடங்கி பதுங்கியதும், குற்றம் செய்யாமல் வாழ்கையை கண்டு நடிங்கியதும், ஓடு ஓடு வென ஓடியதும் வாழ மறந்து கலங்கியதும், ஏன் இந்த மாற்றம் ஏன்  இந்த தடு மாற்றம் கருவென முளைத்து வந்தோம் சேய்யென பிறந்து வந்தோம், இளமையென வளர்ந்து நின்றோம். இதற்கு மேல் செல்ல ஏனோ பயந்து நின்றோம், வாழ்கையென்பது மலையுச்சி அல்ல வெறும் காலங்களின் நீட்சி, கவலையெல்லாம் மூட்டை கட்டி போகும் வழியில் தூக்கி கொட்டி, காரணம் இன்றி சிரித்து கொண்டு மெல்ல நடந்து வாழ்கை நடத்தி, போகும் வழியில் தேடி கொள்வோம். முயற்சி பலவும் விதைத்து செல்வோம் மரமாய் வளர்ந்து நிழல் தருமென, வரும் துன்பங்களை துரத்தி செல்வோம் நீ எனக்கு சொந்தம் இல்லையென, இன்புற்று வாழ்வோம் நாமும் கர்வம் கொண்டு வாழும் வரை அன்பை தந்து இவுலகத்தின் மேல் தீர காதல் கொண்டு.                                         💞தமிழன்பன்💞

நெஞ்சாங்கூட்டில்💞

என்னதான் மாயம் செய்தாளோ இறு விழிதனை தூங்க செய்யாமல்  அவன் மதிதனை மயங்க செய்தவள், என்னதான் காதல் செய்தானோ அவன் மதிதனை மீறி செல்லாமல் அவள் இதயத்தை தீண்டிச்சொல்லாமல்.                                               💞தமிழன்பன்💞

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

அண்ணாந்து பார்😍💞

அமிழ்துதான் தமிழ்💞தமிழ்தான் அமிழ்து கணுவுகள் ஏதுமில்லா பொழுதுகள் கரைந்துபோன கம்பீர நாட்கள் கடந்தாகிவிட்டனவே சொட்டும் நீரின் ஓசையும் காற்றின் வருடலும் கார்மேக இருட்டில் மறைந்து கரைந்து காலம் கடக்க கால் கடுக்க காத்திருந்தும் ஏது பயன் ? கரையான் புத்திண் பாம்புகளாய் பிறர் கனவில் ஏறி பயணம் சென்றோமே! கனவுகள் வாழ்வின் அங்கம் என ஆனபின் சுமந்து நாமும் சென்றிடுவோம்! தோன்றிவிட்டோம் காணுவுகளை வாரி அணைத்து அண்ணாந்து மேகம் ரசித்து பயணிப்போம் முடிவிலியில் கரைந்து மறையும் வரை!                                   💞தமிழன்பன்💞