Skip to main content

இளமை பய(ண)ம் 😭😫😨 நன்றி பொன் மூர்த்தி👍👍




ஒரு மாற்றம்  ஏனோ தடு மாற்றம்
முற்றம் சென்று முடங்கி பதுங்கியதும்,
குற்றம் செய்யாமல் வாழ்கையை கண்டு நடிங்கியதும்,
ஓடு ஓடு வென ஓடியதும் வாழ மறந்து கலங்கியதும்,
ஏன் இந்த மாற்றம் ஏன்  இந்த தடு மாற்றம்
கருவென முளைத்து வந்தோம் சேய்யென பிறந்து வந்தோம்,
இளமையென வளர்ந்து நின்றோம்.
இதற்கு மேல் செல்ல ஏனோ பயந்து நின்றோம்,
வாழ்கையென்பது மலையுச்சி அல்ல
வெறும் காலங்களின் நீட்சி,
கவலையெல்லாம் மூட்டை கட்டி போகும் வழியில் தூக்கி கொட்டி,
காரணம் இன்றி சிரித்து கொண்டு மெல்ல நடந்து வாழ்கை நடத்தி,
போகும் வழியில் தேடி கொள்வோம்.
முயற்சி பலவும் விதைத்து செல்வோம்
மரமாய் வளர்ந்து நிழல் தருமென,
வரும் துன்பங்களை துரத்தி செல்வோம்
நீ எனக்கு சொந்தம் இல்லையென,
இன்புற்று வாழ்வோம் நாமும் கர்வம் கொண்டு வாழும் வரை அன்பை தந்து
இவுலகத்தின் மேல் தீர காதல் கொண்டு.
                                        💞தமிழன்பன்💞

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤