கண் தெரியாது இருட்டுலகம் என நம்பினேன், எதிரில் தோன்றினாள் கண் நிறைய ஆனந்தத்தின் கூறுகள் முகம் நிறைய புன்னகை பூக்கள், நடை கிடையாது நமக்கென, கண்ணில் நீரும் வாய் நிறைய புன்னகையும் கொண்டு தவழ பழகினேன், கரம் தந்து சிரம் தாழ்த்தி நடை பழக முதல் நம்பிக்கை தந்து நடைபோட செய்தாள், மௌனமே நம் மொழி இதற்கு மேல் எதற்கு தனி மொழியென விட்டு விட்டேன் பேரின்பம் பூத்து வாரி அனைத்து உச்சியில் முத்தம் ஒன்று தந்தால் நான் சொன்ன ஒற்றை சொல்லான அம்மாவுக்கு 🙏🙏🙏 ❤தமிழன்பன்❤