Skip to main content

Posts

Showing posts from April, 2018

முதல் முதலாய் என் அம்மாவுக்கு ❤💞

கண் தெரியாது இருட்டுலகம் என நம்பினேன், எதிரில் தோன்றினாள் கண் நிறைய ஆனந்தத்தின் கூறுகள் முகம் நிறைய புன்னகை பூக்கள், நடை கிடையாது நமக்கென, கண்ணில் நீரும் வாய் நிறைய புன்னகையும் கொண்டு தவழ பழகினேன், கரம் தந்து சிரம் தாழ்த்தி நடை பழக முதல் நம்பிக்கை தந்து நடைபோட செய்தாள், மௌனமே நம் மொழி இதற்கு மேல் எதற்கு தனி மொழியென விட்டு விட்டேன் பேரின்பம் பூத்து வாரி அனைத்து உச்சியில் முத்தம் ஒன்று தந்தால் நான் சொன்ன ஒற்றை சொல்லான அம்மாவுக்கு 🙏🙏🙏                               ❤தமிழன்பன்❤

வானின் நீளம் கொண்டு வா ❤

காதலால் உன்னை காணும் கண்ணால் காணும் யாவும் கண்ணில் பதியும், ஒட்டிக்கொண்டு புது வரி கேக்கும் சத்தியம் செய்தும் சொல்வதுண்டு உன்னை எழுதும் கவி அல்லன் ஒரு பெண்ணை நெஞ்சில் கொண்டு புலம்பித்தள்ளும் பித்தனென்று.                                  ❤தமிழன்பன்❤

அண்டம் 🙏

அண்டம் இதுவே புரிகிறதே மின்னும் ஒளியே சிலிர்கிறதே பால் வண்ணம் ஒளிர்கிறதே வளி மண்டலம் வளுவூட்ட பகலும் இருவவும் பிரிகிறதே நீறும் இங்கு பங்களிக்க உயிர்கள் இங்கு வளர்கிறதே, ஈர்ப்பும் பெரிதாய் கடன் தந்து காற்றின் வறுடல் மகிழ்விக்க மனிதன் வாழ்வும் நகர்கிறதே உலகம் இதுவே தெரிகிறதே, காதல் பூவாய் மலர்கிறதே, அளவற்ற அண்டமிதில் எங்கோ இது போல் நிகளாதே உயிரும் ஏனோ இருக்காதா? நாளை கண்டம் தாண்ட முடியாதா? அன்பை மட்டும் கொண்டு இயங்கும் காலமும் பிறவாதா?                                💐 தமிழன்பன்💐

மூணார்

இசை இனிது என்றேன் இரவில் அமைதி இனிது என்றேன் மௌனத்தின் இன்பம் இனிது என்றிருந்தேன் மேகம் வந்து என் உயிர் மூச்சில் கலக்க மூணாற்றின் இருளில் வனத்தின் மத்தியில் எதோ கண்டறியா பூச்சிகளின் இசை அழகென்று உணர்ந்தேன் இருளின் மடியில் பேரின்பம் கொண்டேன் இவ் அழகிய காட்சியில் ஏனோ புரிய இன்பம் கொண்டேன், மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஏனோ இத் தருணத்தை காதல் கொண்டேன்❤ சூரியன் வந்து சுட்டெரிக்கும் சில நேரம், மேகம் வந்தவனை சூழ்ந்துகொள்ள, பச்ச வண்ண மேனியாள் அழகு ததும்பி நிற்கிறாள், கரு கரு மேகங்கள் மலையை முட்டி செல்ல, குளிர் காற்று வந்தென்னை சூழ்ந்து கொள்ள, பாலம் ஒன்றில் காற்றில் கால் ஆட  மொவ்நித்து அமர்ந்து இயற்கையின் தாள் பணிகிறேன்.                                        ❤தமிழன்பன்❤