Skip to main content

Posts

Showing posts from January, 2018

ஓவியம் பேசும் கவிதை

இது பார்வையா? இல்லை பூவளி சிறு விழி வழி வந்துதென்னை முத்தமிடும் வித்தையா? வித்தை ஒன்றும் அறியா பிறவியம்மா இப்பிறவியில் என்றும் நீ என்னவளம்மா அவ்விடமும் இவ்விதமே என சற்று அருள் புரியுமம்மா! காதல் புரியும் கலை அறியா உன்னவனோ உம்மை விட காதல் அதிகம் கொண்டவனம்மா! உன் அன்பை கொண்டென்னை வென்றவளே இது போல் தினம் தோற்கயில் உள்ளம் நெகிழுதம்மா! இருமனம் சேர்ந்து வாழ வாழி நிந்தன் முடிவை சொல்ல இம்மாலையை சற்று சூடிகொள்ளலம்மா இம்மானிடனை ஏற்றுக்கொள்ளம்மா! -தமிழன்பன்💐

காதல் போர் - A war of love

கண் இமைக்காமல் நின்று இளம் கன்னியின் பக்கம் நோக்க மொட் என இருந்த உள்ளம் காதல் பூவாய் மலர புயல் காற்றென மலர்ந்த உள்ளம் திக்எட்டிலும் சட சட வென குழம்ப புது கவிதைகள் பல வந்து உள்ளம் மகிழ முப்பதினாயிரம் புறவிகள் நடுவில் வெள்ளை பரிமேல் அழகி நிந்தன் கரம் பிடித்து காதல் போர் புரிய உந்தன் செங்கோல் கிழ் ஆட்சி செய்ய காத்திருக்கும் ஒரு சிற்றரசினனின் புலம்பல் நீ கேளாய்யோ மதம் பிடித்த களிறு போல் காதல் வன்துணை முட்ட மனம் இரண்டும் பொன்னியிலே தோனிப்போல் மிதக்க வேல் முனையை கண்டு நான் அஞ்சியது இல்லை கன்னியே உன் இரு கண் விழி கொண்டு நீ என்னை கொள்ள என் உள்ளமோ திசையெங்கும் சென்று பேரின்ப நடனம் புரிய ஒரு சொல் கேட்டேன் அடி தோழி அது உன் வாய் மொழியோ என உள்ளம் கடந்து ஏங்க கொன்று விட்டாய்யடி உன் உளியால் என்னை சிற்பமாய் செதுகுவாயென காத்திருந்த என்னை பொடி கற்கள்லாய் உடைத்து விட்டு செல்ல என்றும் உன் வரவை காத்து நாட்கள் பல யுகங்களாய் ஓட புது வாசம் ஒன்று வீச மறைந்த சூரியன் கிழக்கில் உதிக்க உள்ளம் இரண்டும் உச்சி வானத்தில் பறக்க கனா ஒன்று கண்டேன் தோழி அதில் நான் உன் கரத்தை பிடிக்க உன்னவனை நீ ஏக்கத்தில்...

முத்தமிட்டால் தமிழ் அன்னை

அந்திநேர தென்றல் வந்தென் செவிக்கு செய்தி சொல்ல புது வெள்ளம் போல் தாய் தமிழ் வந்துஎன்னக் ஆட்கொள்ள சுடர் மிகும் என் மொழியை என்றும் நான் காதல் கொள்ள தமிழை வணங்கி தமிழை தொழுது தமிழை படித்து போற்றிட என் உள்ளத்துகு தூது அனுப்பி மகிழ்கிறேன் ❤

காதல்மழை பொழிந்தது

வெறும் தண்ணீர் இடமா ஒப்பிடுவேன் ஒப்பனைக்கும் எட்டா விழிகளை? தண்ணீரும் வற்றலாகுமே! அந்த கண்ணாடியும் உடைந்து போகுமே! நான் கொண்ட காதலோ யுககங்கள் கடந்தும் வாழுமே! கதை புனையும் கலைகள் தான் கலை அரசியிடம் பலிக்குமோ? ரகசியம் கேட்கிறாயே என் ரகசியமே நீதானே? தூது சொல்ல வந்தவனை கரம் பிடித்து கொள்வாயா? காதல் கொண்டு வந்தவனை காதலனாக ஏற்பாயா? கரத்தை பற்றி நீ உரைத்த மொழிகள் என் ரத்தம் உறைய செய்கிறது கொஞ்சம் பித்தும் பிடிக்க செய்கிறது, காலம் நூறு ஆனாலும் முதுமை வந்து சேர்ந்தாலும் நம் காதல் மட்டும் வாழுமே! காலம் கடந்தும் காவியம்  ஆகக் கூடுமே!

சாகா வரம் வாய்த்த வள்ளுவன்

அன்புண்டு அறிவுண்டு உழவுண்டு உலகனைத்தும் உன்னால் தமிழுக்கு பெருமை உண்டு. ஏடெடுத்து ஈரடியில் நெறி தொகுத்து முப்பால் அளித்து உலகப்பொதுமறை வடித்த பெருந்தகையே! வாழிய நின் புகழ்         -அன்புடன் தமிழன்பன்

வானதியின் புலம்பல்

மொழிஎன்றாலே அழகு அதுவும் நீர் அருள்மொழி ஆயிற்றே லங்கைகு நீர் போர் புரிய செல்ல என் மனமோ உனக்கு காவல் செல்ல என் உடலோ மூர்ச்சடித்து கொள்ள சற்றனெ உன் தமக்கை தாங்கிக்கொள்ள நீர் என்னை கடந்து ஏங்க கண்விழித்தேன் உம் காதல் வந்தெனக்கு தூது சொல்ல ஆண்டுகள் பலவும் நான் கார்திருப்பேன் வெற்றி வாகை ஒன்று நீ சூடிகொள்ள உன் உடன் என்றும் நான் காதல் கொள்ள உன் உள்ளத்தில் இடம் ஒன்று கொடு உன் பட்டது ராணி எனும் எண்ணம் என்றும் எனக்கு இல்லை பொன்னியின் செல்வரே வேண்டுதல் முடிந்தாய்ற்று உன் அருள் வேண்டி காத்திருக்கும் வானதி.               -அன்புடன் தமிழன்பன்❤                

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மெல்லிய பூங்காற்றிலும் புரியா மொழியில் இசை ஒன்று கண்டேன் நடு நிசியில் வெண்நிர ஓளி இன்றியும் பல வகை உவமை கண்டேன் வெறும் வனத்திலும் பல் வகை பூ மலர்வதை கண்டேன் வற்றிய நதியிலும் ஜீவன் இருத்தலை கண்டேன் கொடும் உள்ளத்திலும் ஒரு வகை அன்பை கண்டேன் அன்பொன்றே மெய் என கண்டேன் இந்த வையகத்தை தீரா காதல் கொண்டேன்.

புது வெள்ளம்

புது விதை தூவி பலர் அன்பை நாடி எழுதி மடித்து வைத்ததை தூசி தட்டி வைக்கிறேன் பிழைகள் இருப்பின் திருத்திடு உன் கருத்தை கொஞ்சம் பதிவிடு                                -அன்புடன் தமிழன்பன்