Skip to main content

காதல் போர் - A war of love

கண் இமைக்காமல் நின்று இளம் கன்னியின் பக்கம் நோக்க
மொட் என இருந்த உள்ளம் காதல் பூவாய் மலர
புயல் காற்றென மலர்ந்த உள்ளம் திக்எட்டிலும் சட சட வென குழம்ப
புது கவிதைகள் பல வந்து உள்ளம் மகிழ
முப்பதினாயிரம் புறவிகள் நடுவில் வெள்ளை பரிமேல் அழகி நிந்தன் கரம் பிடித்து காதல் போர் புரிய
உந்தன் செங்கோல் கிழ் ஆட்சி செய்ய காத்திருக்கும் ஒரு சிற்றரசினனின் புலம்பல் நீ கேளாய்யோ
மதம் பிடித்த களிறு போல் காதல் வன்துணை முட்ட
மனம் இரண்டும் பொன்னியிலே தோனிப்போல் மிதக்க
வேல் முனையை கண்டு நான் அஞ்சியது இல்லை கன்னியே உன் இரு கண் விழி கொண்டு நீ என்னை கொள்ள
என் உள்ளமோ திசையெங்கும் சென்று பேரின்ப நடனம் புரிய
ஒரு சொல் கேட்டேன் அடி தோழி அது உன் வாய் மொழியோ என உள்ளம் கடந்து ஏங்க
கொன்று விட்டாய்யடி உன் உளியால் என்னை சிற்பமாய் செதுகுவாயென காத்திருந்த என்னை பொடி கற்கள்லாய் உடைத்து விட்டு செல்ல
என்றும் உன் வரவை காத்து நாட்கள் பல யுகங்களாய் ஓட
புது வாசம் ஒன்று வீச மறைந்த சூரியன் கிழக்கில் உதிக்க
உள்ளம் இரண்டும் உச்சி வானத்தில் பறக்க
கனா ஒன்று கண்டேன் தோழி அதில் நான் உன் கரத்தை பிடிக்க
உன்னவனை நீ ஏக்கத்தில் தல்ல பாவி என்றும் என் நினைவில் இருந்து நீயென்னை கொள்ள
நாட்கள் நகருது மெல்ல மெல்ல

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

😍அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்😍

காலம் நம்மை உமிழும் போது, உறவுகள் நம்மை மறந்த போது, நட்பும் விலகி செல்லும் போது, கண்ணில் நீறும் சுரக்கும் போது, வாழ்வே வெறுத்து அனலாய் மாறும் போது, நினைவுகள் யாவும் சூழ்ந்து நம்மை கொல்லும் போது, தனிமை நம்மை கேள்வி வைக்கும் போது, கோவம் நம் எதிரி ஆகிறது பேரன்பு நம் நண்பனாகிறது. பேரின்ப வாழ்க்கை நம் கனவாகிறது.                               💞தமிழன்பன்💞

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞