Skip to main content

Posts

Showing posts from February, 2018

நிலவே என்னை மயக்காதே😊

நிலா ஒளி அழைக்குதே, காற்று வருடும் சத்தமும் காதுக்குள்லே இசைக்குதே, மேகம் மெல்ல குறு நகையாய் நகைக்குதே, ஒளி வட்டம் கண்ணை கொள்ளை கொள்ளுதே, வான் வரைந்த ஓவியமே பொருள் மட்டும் விளக்கிவிடு, உன் அழகால் இவ்வுலகத்தில் அன்பை வாரி பொழிந்துவிடு.                                   ❤தமிழன்பன்❤

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤

தாய் தமிழ் 😊

மொழியில் பல தலைமுறை மனிதம் வாழ்வதுண்டு, ஒரு மொழி இழிவென்றும் ஒரு மொழி பெரிதென்றும் சொல்லலாகாது, பல மொழியும் கற்க முற்படு உன் மொழியின் சிறப்பை அறிந்திடு, மொழியை காதல் செய்ய பலகிடு பிற மொழியை வெறுத்தல் மறந்திடு, உன் மொழியின் கலப்பை கலை எடு களினியில் சிறப்பை கோபுரம் போல் நிறுத்திடு, தாய் தமிழை இரு கண்ணாய் கறுதிடு செம்மொழியின் தாள் பணிந்திடு.                                  ❤தமிழன்பன்❤ உலக தாய் மொழி தினம்😍 International mother language day😍

வாடா மகனே! வாடா! 😍

  வாடா மகனே! வாடா! உந்தன் செவ்இதழ் கொண்டு கொஞ்சும் முத்தம் தந்து போடா! வாடா மகனே! வாடா! உந்தன் உதட்டை கொண்டு எந்தன் உயிரை தொட்டு போடா! வாடா மகனே! வாடா! என் ஒத்த சொத்தே வாடா! என் கவலையை அறுத்து எரிய உன் முத்த ஆயுதம் கொண்டு வாடா! வாடா மகனே! வாடா! உன் முத்தம் எனும் மந்திரத்தால் என்னை மயக்கி விட்டு போடா! வாடா மகனே! வாடா! உன் முத்த கருவி  கொண்டு என்னை இசைத்து விட்டு போடா! வாடா மகனே! வாடா! முத்தம் ஒன்று இட்டு உன் மூச்சி காத்து கொண்டு என் யாக்கைக்கு கொஞ்சம் உயிர் தந்து போடா! வாடா மகனே! வாடா! உந்தன் எச்சில் வர்ணம்  கொண்டு ஒரு ஓவியம் வரைந்து போடா! என்னை கர்வம் கொள்ள செய்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா! என் விழிநீர் துடைக்க வந்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா! என் இன்பஊற்றின் பிரப்பிடமே! என் அருகில் கொஞ்சம் வாடா! வாடா வாடா வாடா! என்றும் வாடா! முகத்துடன் வாடா!                                   😍தமிழன்பன்😍

ஊர்கூடும் தெருக்கோடி குளத்துல 🤐😭

நீர் வற்றி, துணி தோய்க, துளி தண்ணி இல்ல தெரு கோடி குட்டையிலே, மீன் புடிக்க தூண்டில் போட்டு மீன் ஒன்னும் பிடிக்காம, வெறுத்து போய் வந்த குளம், இன்னைக்கு வெறும் குளமா ஆயிடுச்சு. தக தகனு தங்கம் போல, அந்தி சாயும் நேரத்துல இருந்த குளம், இன்னைக்கு மீன் செத்து நாறிபோச்சி. பண மரத்து அடியில, பாய் விரித்து படுத்த குளம், இணைக்கோ மாடி வீட்டு அழுக்கு தண்ணியில, நியாயம் கேட்டு அழுகுது. பனை ஓசை கேட்ட குளம், நாதி அற்று கிடக்குது 😭😨  நீர் வற்றிய குளத்துல, நினைவுகள் மட்டும் நிரம்பி வலியுது.                                             ❤தமிழன்பன்❤

பூங்குழலி-- பூவை போன்ற குழல் (கூந்தல்) உடையவள்❤

பெயருக்கேற்ப இனிமையானவள் இயற்கை இடம் காதல் உற்றவள் எழுக்கடலுக்கும் சொந்தக்காரி படகோட்டி இவள் பாடுகயிலே! அலை கடல் தான் பொங்கயிலே அகக்கடல் தான் பொங்குவதேன் அழகிய கிளியே உன்தன் கரம் பிடிக்க  சேந்தன் இருக்க இந்த துடுப்பை கட்டி அழுவதேன்.. அழகிய பூங்குழலி                            🙏தமிழன்பன்🙏

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும்

பாட்டுத் தலைவனாய் தென்னங்கீற்றை வைத்தேன், அவனுடன் பாட்டு தலைவி முழுநிலவு கொஞ்சி விளையாடும் காதல் காட்சியை கண்டு உள்ளம் கொள்ளை போக நின்றேன்! கீற்றின் வழி இளம் தென்றல் முட்டி வந்து முத்தம் தர என் சித்தம் மகிழ்ந்திட நின்றேன்! இவ்அழகிய காட்சிகள் யாவும் முண்டாசு பண்ணையாரின் காணி நிலத்தில் சிரம் உயர்த்தி விழி பிதுங்க நின்று கண்டேன்!                                  ❤தமிழன்பன்❤

ஆழிசூல் உலகில் கிழக்கு செவுக்கும் வேலையில்❤

உதிக்கும் காலை வேலையில் செவுக்கும் அழகிய கிழக்கில் ஆழியை பார்த்து நடமாடுகயில் எட்டி பார்க்கும் குட்டி உயிரும் எடுத்து வைக்கும் மழலையும் பெற்றெடுத்த இரு உயிரும் பார்த்து போகையில், வீசும் இன்ப கற்று முத்தமிட்டு போகும்! உள்ளம் மகிழ்ந்து போகும்!                         ❤தமிழன்பன்❤

கண்கள் எங்கே..நெஞ்சமும் அங்கே,..கண்ட போதே சென்றன அங்கே

மையிட்ட கண்ணால் முகம் மலர்ந்து பார்த்தவள் புருவம் உயர்த்தி உயிரை வந்து தொட்டவள் கண் அடித்து  செல்லுகையில் உள்ளம் களவு போனது தேடி கொண்டு வருகிறான் உள்ளம் கொடுத்து அனுப்பிவை காதல் வந்து சொல்லுவான் கரம் பிடித்து காதல் செய்! ❤

குழந்தை சிரிப்பின் சிறப்பு 💐👌👌😊❤

துயில்கொள்ளும் வெண்ணிறத்தான் என்ன கனா கண்டானோ முகம்மலர்ந்து ஒளிர்கிறான் நஞ்சிலா மனசுக்காரன்  விழி மூடியும் என்னத்த கண்டனோ இப்படி மலர்கிறான் செந்நிற உதட்டுக்காரன் மொழி கூட தெரியாம என்னத்த படிச்சானோ இப்படி சிரிக்கிறான் கையோடு கை கோர்க்கும் வித்தைக்காரன் காதல் கீதல் கொண்டானோ இப்படி மகிழ்கிறான் துணியால் கவசம் கொண்டவன் எந்த நாட்டை பிடிச்சானோ இப்படி பேரின்பம் கொள்கிறான் பிறக்கும் போதே தானே ஒட்டி கொள்ளும் இரு உணர்ச்சியும் சாகும் மட்டும் மாறாது இன்பம் துன்பம் ரெண்டு உண்டு இங்கே எதையும் தவிர்க்க முடியாது  மழலை இவன் கற்பிக்க மகிழ்ந்து வாழ பழகுவோம்!                              😍தமிழன்பன்😍 அனைத்து உயிரும் இன்புற்று வாழ்க!!

அன்பே பேரின்பத்தின் உற்று 😍

கடந்து சென்ற வெண்நிலவை நின்று இன்று வியக்க செய்யும் பேரின்பத்தின் உச்சி நிலை காதல்! எச்சில் ஊரும் குட்டி குழந்தையின் தட்டு தடுமாறும் மொழியும் இசையென செவி சுவைக்...

அழகு குட்டி செல்லம் ❤

கண்ணே கனியே என் உயிர் துடிப்பின் காரணமே நின்னை இனி என் உயிரென கொள்வேன், என் உயிர் பிரியையிலும்  உன்னை வந்து காப்பேன்! எனக்கென பிறந்த அதிசயமே உன் மழலை மொழி கோர்த்து ஒரு சொல் உரைப்பாயா? உன் அப்பா எனும் சொல் செவியில் விழின் அக்கணமே சிக்கணமாய் இருந்த என் அன்பு பல்கி பெருக நான் கண்டேன் என் நெஞ்சில் கசியும் மாய நதியுற்றை என் கண்மணியே என் உயிரின் நகலே உன்னால் நான் அடைந்த மகிழ்ச்சியில் இவ்உயிர் பிரியினும் நான் மரப்பேன்  சற்றே நிம்மது இன்றி இம்மதி மயங்கினும் நான் உனை மறவேன்! என் விழிநீர் அழிக்க வந்த பேருயிரே நீ வாழ்!                       ❤தமிழன்பன்❤

வரம் தருவாள் மரம் 💐

மங்கை அவள் சற்றே சிரம் உயர்த்தி வெண்நிற ஆடை கொண்ட கற்களின் குழந்தையாம் மணலை முட்டி சென்ற விதையா காற்றில் அலையும் மாரி கொண்டு சென்றிடும் மேகத்தை முத்தமிடுகிறாள் என்று தன் மொத்த நினைவை ஒன்றாக்கி இயற்கையின் பால் காதல் கொண்டு நனைகிறாள் தன் உள்ளம் மகிழ வியக்கிறாள்❤                                      🙏 தமிழன்பன்🙏