Skip to main content

வாடா மகனே! வாடா! 😍

 வாடா மகனே! வாடா! உந்தன் செவ்இதழ் கொண்டு கொஞ்சும் முத்தம் தந்து போடா!
வாடா மகனே! வாடா! உந்தன் உதட்டை கொண்டு எந்தன் உயிரை தொட்டு போடா!
வாடா மகனே! வாடா! என் ஒத்த சொத்தே வாடா! என் கவலையை அறுத்து எரிய உன் முத்த ஆயுதம் கொண்டு வாடா!
வாடா மகனே! வாடா! உன் முத்தம் எனும் மந்திரத்தால் என்னை மயக்கி விட்டு போடா!
வாடா மகனே! வாடா! உன் முத்த கருவி  கொண்டு என்னை இசைத்து விட்டு போடா!
வாடா மகனே! வாடா! முத்தம் ஒன்று இட்டு உன் மூச்சி காத்து கொண்டு என் யாக்கைக்கு கொஞ்சம் உயிர் தந்து போடா!
வாடா மகனே! வாடா! உந்தன் எச்சில் வர்ணம்  கொண்டு ஒரு ஓவியம் வரைந்து போடா!
என்னை கர்வம் கொள்ள செய்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா!
என் விழிநீர் துடைக்க வந்தவனே!
என் அருகில் கொஞ்சம் வாடா!
என் இன்பஊற்றின் பிரப்பிடமே!
என் அருகில் கொஞ்சம் வாடா!
வாடா வாடா வாடா! என்றும் வாடா! முகத்துடன் வாடா!
                                  😍தமிழன்பன்😍

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤