Skip to main content

குழந்தை சிரிப்பின் சிறப்பு 💐👌👌😊❤

துயில்கொள்ளும் வெண்ணிறத்தான் என்ன கனா கண்டானோ முகம்மலர்ந்து ஒளிர்கிறான்
நஞ்சிலா மனசுக்காரன்  விழி மூடியும் என்னத்த கண்டனோ இப்படி மலர்கிறான்
செந்நிற உதட்டுக்காரன் மொழி கூட தெரியாம என்னத்த படிச்சானோ இப்படி சிரிக்கிறான்
கையோடு கை கோர்க்கும் வித்தைக்காரன்
காதல் கீதல் கொண்டானோ இப்படி மகிழ்கிறான்
துணியால் கவசம் கொண்டவன் எந்த நாட்டை பிடிச்சானோ இப்படி பேரின்பம் கொள்கிறான்
பிறக்கும் போதே தானே ஒட்டி கொள்ளும் இரு உணர்ச்சியும் சாகும் மட்டும் மாறாது இன்பம் துன்பம் ரெண்டு உண்டு இங்கே எதையும் தவிர்க்க முடியாது 
மழலை இவன் கற்பிக்க மகிழ்ந்து வாழ பழகுவோம்!
                             😍தமிழன்பன்😍

அனைத்து உயிரும் இன்புற்று வாழ்க!!

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤