Skip to main content

அழகு குட்டி செல்லம் ❤

கண்ணே கனியே என் உயிர் துடிப்பின்
காரணமே நின்னை இனி என் உயிரென கொள்வேன், என் உயிர் பிரியையிலும்  உன்னை வந்து காப்பேன்!
எனக்கென பிறந்த அதிசயமே உன் மழலை மொழி கோர்த்து ஒரு சொல் உரைப்பாயா? உன் அப்பா எனும் சொல் செவியில் விழின் அக்கணமே சிக்கணமாய் இருந்த என் அன்பு பல்கி பெருக நான் கண்டேன் என் நெஞ்சில் கசியும் மாய நதியுற்றை என் கண்மணியே
என் உயிரின் நகலே
உன்னால் நான் அடைந்த மகிழ்ச்சியில்
இவ்உயிர் பிரியினும் நான் மரப்பேன் 
சற்றே நிம்மது இன்றி இம்மதி மயங்கினும் நான் உனை மறவேன்!
என் விழிநீர் அழிக்க வந்த பேருயிரே நீ வாழ்!
                      ❤தமிழன்பன்❤

Comments